Availability: In Stock

ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 2

500.00

பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.

10 in stock

Description

தன் பெயரே மந்திரமாகக் கொண்டவர் பெருமான். அஸ்தினாபுரத்தில் கௌரவர் சபையில் பாஞ்சாலி அவமானப்படுத்தப்படுகின்றாள். அச்சமயம் கிருஷ்ண பகவான் சால்வன் என்னும் மன்னனிடம் போர் புரிந்து கொண்டு இருக்கின்றான். அந்த நேரம் அபலையாக நின்று சபையில் அலறிய பாஞ்சாலி தன்னைக் காக்க பகவானின் திருநாமத்தைக் கூறி கதறுகின்றாள். கணவர்களாலும், பீஷ்மர் போன்ற பெரியவர்களாலும் காப்பாற்ற முடியாத அவளின் மானத்தை பகவான் திருநாமம் காப்பாற்றுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த போது அங்கு அவமானப்படுத்தப்பட்ட பாஞ்சாலிக்கு ஆதரவாக பகவானின் திருநாமம் மட்டுமே இருந்தது.

பீஷ்மர் பாரதப் போரில் பத்தாம் நாள் யுத்தத்தில் அம்புப் படுக்கையில் கிடக்கலானார். அந்த நிலையில் கிடக்கும் பீஷ்மர் உடம்பிலிருந்து துரியோதனனிடம் சாப்பிட்ட உணவு எல்லாம் ரத்தமாக வெளியேறுகிறது. ஆயினும் உடம்பு தீயாக எரிகிறது. அதனைப் போக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை; அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். அவரை வணங்க பீஷ்மரால் முடியவில்லை. அச்சுதனை உள்ளத்தில் அர்ச்சனை செய்து அவனின் ஆயிரம் திருநாமங்களையும் அவர் சொல்கின்றார். அந்த நாமங்களை அவர் சொல்லச்சொல்ல அவர் உடம்பில் ஏற்பட்ட துன்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முடிவில் இல்லாமல் போய்விடுகிறது.

Additional information

Weight 0.728 kg
Dimensions 21.6 × 13.8 cm
Author

ISBN

978-93-6373-645-0

Language

தமிழ்

Year of Publishing

2024

Pages

508

Format

publisher

இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவு

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 2”

Your email address will not be published. Required fields are marked *